சொந்த கட்டடத்திற்கு மாறும் ரேஷன் கடைகள்... உணவுத்துறை சக்கரபாணி தகவல்...

தமிழகத்தில் வாடகைக்கட்டிடத்தில் இயங்கி வரும் அனைத்து ரேசன்கடைகளும் விரைவில் சொந்தக்கட்டிடத்துக்கு மாற்றப்படும் என  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சொந்த கட்டடத்திற்கு மாறும் ரேஷன் கடைகள்... உணவுத்துறை சக்கரபாணி தகவல்...
திண்டுக்கல் மாவட்டம் தொப்பய்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக விண்ணப்பித்த நபர்களுக்கு குடும்ப அட்டையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
 
பின்னர் மேடையில் பேசிய அவர் தமிழகத்தில் வாடகைக்கட்டிடத்தில் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளும் விரைவில் சொந்தக்கட்டிடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் வாடகைக்கட்டிடத்திற்கு  கொடுக்கப்படும் 618கோடி ரூபாய் நிதி மிச்சமாகும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார்.