சாலை விபத்தில் உயிரிழந்த நண்பன்… போதையில் ஆம்புலன்ஸ் மீது கதகளி ஆடிய போதை கும்பல்…

மதுரை அருகே விபத்தில் இறந்த நண்பனின் இறுதி ஊர்வலத்தில் ஆம்புலன்ஸ் மேற்கூரையில் ஏறி நின்று ஆபத்தான முறையில் சென்ற போதை மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்த நண்பன்… போதையில் ஆம்புலன்ஸ் மீது கதகளி ஆடிய போதை கும்பல்…

மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று திங்கட்கிழமை கல்லூரியை முடித்து விட்டு டூவீலரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்கு வரும் வழியில் டூவீலரில் விபத்துக்குள்ளானதில் அபி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடித்துவிட்டு இருந்து அவரது சொந்த ஊரான திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதிக்கு தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்புலன்சுக்கு முன்னால் கூடிய அபி கண்ணனின் நண்பர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். 

அப்போதுசில நண்பர்கள் ஆம்புலன்ஸில் மேலே ஏறி நின்ற வரும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சிலர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தியும், தூக்கி எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. லைக்கேறிய போதையில் ஆம்புலன்ஸில் மேற்கூரையில் ஆபத்தான முறையில் சென்ற மாணவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.