போதைக்கு அடிமை: குடிபோதையில் பீர் பாட்டிலால் தாயை குத்திகொலை...

போதைக்கு அடிமை: குடிபோதையில் பீர் பாட்டிலால் தாயை குத்திகொலை...

வியாசர்பாடியில்  குடிபோதையில் பீர் பாட்டிலை உடைத்து தாயை குத்திய மகன் கைது. சிகிச்சை பலனின்றி தாய் பரிதாபமாக உயிரிழப்பு 

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு இவரது மனைவி கண்ணகி அப்புனு வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு அஜய் என்கின்ற லூசு அஜய் 22 என்ற மகன் உள்ளார் இவர் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் வேலையை விட்டு ஒப்பந்ததாரர்கள் நிறுத்திவிட்ட நிலையில் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார். அஜய் அடிக்கடி குடித்துவிட்டு தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று காலை அப்புனு வேலைக்கு சென்று இருந்த நிலையில் அஜய் குடிபோதையில் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று பீர் பாட்டிலை உடைத்து தனது தாயின் தலை.முகம் உள்ளிட்ட இடங்களில் குத்தினார் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எம் கே பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அப்போது ரோந்து பணியில் இருந்த எம் கே பி நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கண்ணகியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும் படிக்க| பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்

சம்பவம் தொடர்பாக எம் கே பி நகர் போலீசார்  வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அஜய் என்கின்ற லூசு அஜயை நேற்று  கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி நேற்று இரவு ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.