காவலரிடம் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி.. வீடியோ வெளியாகி வைரல்!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு காவலரிடம் போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

காவலரிடம் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி.. வீடியோ வெளியாகி வைரல்!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் புற நகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இராமநாதபுரம் டவுன் காவல் நிலைய காவலர் காரிகாலன் இரவு நேர பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனை நுழைவு வாயிலில் போதை  ஆசாமி ரகளையில் ஈடுபட்டுகொண்டு இருந்தார்.

இதையடுத்து காவலர் காரிகாலன், அவரை அங்கிருந்து அமைதியாக செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, என்னை அடித்து ஜெயிலில் தள்ளி பார் என வசனம் பேசி ரகளையில் ஈடுபட்டார். இச்சம்பவத்தை அவ்வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.