திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்... தமிழ்நாடு முழுவதும் நடைபெரும் - தலைமை செயலகம்.

திராவிட மாடல்  அரசின்  2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்... தமிழ்நாடு முழுவதும் நடைபெரும் - தலைமை செயலகம்.

திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் , மகளிர், கழனியில் பாடுபடும் உழவர்கள், அலைகளில் உழைக்கும் தொழிலாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன்களைப் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வள சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும், கழக அரசின் சசாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்ந்திடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. 

   

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 72 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர், பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் வருகிற மே 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  " திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனவும்,    

மேலும்,பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் குறித்த விபரங்கள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும் என தம்மை கழகத்தால் அதிகார பூர்வமான அறிவிப்பு  வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க   ]  " திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை..! "