அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பம்... சாதனை படைத்த பள்ளி ஓவிய ஆசிரியர்...

திருக்கோவிலூரில் ரப்பரில், டாக்டர். ராதாகிருஷ்ணனின் சிற்பத்தை உருவாக்கி, பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பம்... சாதனை படைத்த பள்ளி ஓவிய ஆசிரியர்...

சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் மணலூர்பேட்டையைச் சேர்ந்த செல்வம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிற்பத்தை செதுக்கி அசத்தியுள்ளார்.

2 மணி நேரத்தில் நேர்த்தியாக உருவாக்கிய சிற்பத்தைக் கண்ட மாணவர்களும், பொதுமக்களும் ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.