மேகதாது அணையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைப்பு...

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுகிறதா? என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேகதாது அணையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைப்பு...

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுக்க  தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  ஆனால் அதைனை பொருட்படுத்தாமல் மத்திய அரசு 
 உதவியுடன் மேகதாதுவில் அணை கட்ட, கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து கொண்ட தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு, மேகதாது அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு செல்லாது என கூறியிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுகிறதா? என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டுள்ளது.