பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குவிந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள்,சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய குவிந்தனர்.

பள்ளிகள் தொடர்  விடுமுறை என்பதாலும்  ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.

படிப்பாதை, மின்இழுவை ரயில்,ரோப்கார் ஆகியவை மூலம் மலைக்கோவில் சென்ற  பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் முடி காணிக்கை செலுத்துவதற்காக அதிக அளவில் பக்தர்கள்  கூட்டம் காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.