”பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து.......” துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் கனிமொழி...!!

”பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து.......” துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் கனிமொழி...!!

துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் மேடையில் கண்கலங்க நா தழுதழுக்க  உரையாற்றிய கனிமொழி.

கட்சி இடைவெளி:

"திமுக உருவானோபோது பெரியாருக்கும் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் தலைவர்களுக்கும் இருந்த சிறிய இடைவெளி அண்ணாவை உறுத்தியது. எனவே பெரியார் போற்றும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்றார் அண்ணா." என்று பேசியுள்ளார் கனிமொழி.

அண்ணாவின் அச்சம்:

”அண்ணா முதலமைச்சரான பிறகு ஆட்சி வந்து விட்டதே , கட்சி போய்விடுமோ என்று அஞ்சினார். ஆனால்  மாநில சுயாட்சி , இந்தி எதிர்ப்பு , சமூக நீதி  போன்ற அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றினார் கருணாநிதி.” என்றும் தெரிவித்துள்ளார் கனிமொழி. 

பகைவர்களின் எதிர்ப்பை...:

”கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என திமுகவின் பரம்பரை பகைவர்கள் எதிர்பார்த்தனர் , அவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து , வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் ,  ஆழிப்பேரலையாக எழுந்து நின்றார் ஸ்டாலின்.” என்று கூறியுள்ளார் .

அப்பா இல்லாத இடத்தில்...:

”பெண்களை மீண்டும் சமையலறைக்குள் அடைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது. அப்பா இல்லாத இடத்தில் இந்த நாடு உங்களை  வைத்து பார்க்கிறது” என ஸ்டாலினை நோக்கி கூறியுள்ளார்.

மேலும், “அண்ணா , அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.  உங்கள் வழியில் , உங்கள் அடியில் பின்தொடர்ந்து ,  உங்கள் போராட்டம் அனைத்துக்கும் பின்னால் அணிவகுக்க நான் தயாராக உள்ளேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   ”பாஜகவின் மதவாத வாலை.....” கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆ. ராசா!!