செய்தியாளரின் செல்போனை பறித்துக் கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்... 

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வாக்குசாவடியில் அனைத்து கட்சியினரிடையே தள்ளு முள்ளு.

செய்தியாளரின் செல்போனை பறித்துக் கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்... 

வேலூர்மாவட்டம், இறைவன் காட்டில் அன்னை பாலிடெக்னிக்கில் அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை இங்கு நடைபெற்றது காலை முதல் நடைபெற்ற எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியும் பிடி ஓவுமான கனகராஜ் அறிவிக்கவில்லை இதனால் எல்லா கட்சியினரும் ஆர்.ஓ. அறையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால் தள்ளுமுள்ளு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது இதனை படம்பிடித்த செய்தியாளரின் செல்போனை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி பறித்துகொண்டு செய்தியாளரை தாக்க முயன்றார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு காணப்பட்டது இதனால் போலீசார் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களை வெளியேற்றினார். 

இந்த குழப்பத்திற்கும் பிரச்சணைக்கும் காரணம் பிடி.ஓ கனகராஜ் தான் மாவட்ட ஆட்சியர் 4 முறை வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க பிடி ஓவிடம் கூறியும் அவர் இதனை செய்யாததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.