மணிப்பூர் வன்கொடுமையை  கண்டித்து காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் வன்கொடுமையை  கண்டித்து  காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி சார்பில்  ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் வன்கொடுமையை  கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலை தர்கா அருகில் மணிப்பூர் கலவரத்திற்கு  மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இளைஞர் அணி கமிட்டி தலைவர் லெனின் பிரசாந்த்  மற்றும் கவுன்சிலர் சிவராஜ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, ”மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் சீண்டுதல் செய்த காணொளி நாட்டையே  உலுக்கியுள்ளது.

பாஜக தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.மோடி பாஜக  அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்கள் எதிராக குற்றங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் இட வேண்டும்.மணிப்பூரில் முதல்வர் இந்த கலவரத்தை தடுக்க தவறியதற்கு அவரை குடியரசு தலைவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்

உங்களுக்கு ஆட்சி காலமாக இருக்கின்ற ஆறு மாத காலத்திலாவது மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் ”, என கோறிக்கை எழுப்பினர். 

இதையும் படிக்க    | எதிர்க்கட்சிகள் அமளி - 2ம் நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!