காதலர் தினத்துக்கு சலுகை அறிவித்த நகை கடை...வாழ்த்து மடலை தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டம்!

காதலர் தினத்துக்கு சலுகை அறிவித்த நகை கடை...வாழ்த்து மடலை தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் நகை கடையை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் காதலர் தின வாழ்த்து மடலை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதலர்களையும், காதலர் தினத்தையும் ஊக்குவிக்கும் வணிக நிறுவனங்களை கண்டித்து இந்து முன்னணியினர் அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : பலருக்கும் காதல் எட்டாக்கனி தான்...காதலால் மருத்துவ படிப்பை இழந்த இளம்பெண்!

அப்போது, காதலர் தினத்தையொட்டி அண்ணா சாலையில் உள்ள தனியார் நகை கடை ஒன்று சலுகை விலையில் நகை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சலுகை அறிவித்த நகைக் கடையை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டையை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.