பள்ளி நேரத்தில் பேருந்துகளை இயக்க கோரிக்கை...! மாணவர்கள் மனு...!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பந்தனேந்தல் பகுதியில், பள்ளி நேரத்தில் பேருந்து வசதி செய்து தர பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பந்தனேந்தல் பகுதியை சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஜோயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். பந்தநேந்தல் கிராமத்தில் இருந்து அவர்கள் படிக்கும் ஜோகில்பட்டி அரசு பள்ளி, 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இக்கிராமத்திற்காக இயக்கப்படும் அரசுப் பேருந்தானது, காலை பள்ளி செல்லும் நேரம் மற்றும் மாலை பள்ளி விடும் நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் 4 கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர்.
எனவே தங்கள் பகுதிகளில் வரும் அரசுப் பேருந்து பள்ளி நேரத்தில் இயக்கப்பட வேண்டும் என்று கோரி அக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 40 பேர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் இன்று காலை மனு அளித்தனர். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உறுதி அளித்தார்.