பேருந்து இயக்க தாமதம்.. கேள்வி கேட்ட பெண் மீது சரமாரி தாக்குதல்

சென்னை பெரும்பாக்கத்தில் பேருந்தை இயக்க தாமதம் ஏன்? என கேள்வி கேட்ட பெண் பயணியை ஓட்டுனர் அடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து இயக்க தாமதம்.. கேள்வி கேட்ட பெண் மீது சரமாரி தாக்குதல்

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் - முருமதா தம்பதியினர், பாரிமுனை செல்வதற்காக, அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளனர். அப்போது அரை மணி நேரத்திற்கு மேலாகியும், பேருந்து இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த முருமதா, வெகுநேரமாகியும் பேருந்தை ஏன் இயக்கவில்லை? என ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர், பெண் என கூட பாராமல், அவரை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். முருமதா மயங்கி விழுந்ததால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள், ஓட்டுனரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.