துருக்கி, சிரியா பேரழிவால் மிகுந்த வேதனை அடைந்தேன் - முதலமைச்சர்

துருக்கி, சிரியா பேரழிவால் மிகுந்த வேதனை அடைந்தேன் - முதலமைச்சர்

துருக்கி மற்றும் சிரியா பேரழிவில் பலர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நில நடுக்கங்கள் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு ஏற்பட்ட பெரும் உயிர் இழப்பு மற்றும் அழிவுகளால் தான் வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த துயரமான நேரத்தில் இருநாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார்..