இரட்டை குழந்தை பெற்றெடுக்க வேண்டிய கர்ப்பிணி பெண் பரோட்டா சாப்பிட்டு உயிரிழப்பு?  

பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை குழந்தை பெற்றெடுக்க வேண்டிய கர்ப்பிணி பெண்  பரோட்டா சாப்பிட்டு உயிரிழப்பு?  

அருப்புக்கோட்டை அருகிலுள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சங்கன் – அனந்தாயி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. அடுத்து கர்ப்பமுற்றிருந்த அனந்தாயிக்கு இரவு நேர உணவாக, வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடையிலிருந்து சங்கன் பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார். சாப்பிட்டதும் அனந்தாயிக்கு வாந்தி, குமட்டல் வர, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அனந்தாயி மரணமடைந்துள்ளார்.

 திருமணமான மூன்றரை ஆண்டுகளுக்குள்ளாக மரணம் ஏற்பட்டுள்ளதால், அனந்தாயி இறப்பு குறித்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், டி.எஸ்.பி. மதியழகன் (பொறுப்பு) ஆகியோர் உறவினர்களிடம் விசாரணை செய்தனர்.