தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,086 ஆக பதிவு!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தினசரி பாதிப்பு 3,086 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,086 ஆக பதிவு!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை உச்சம் பெற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு  மளமளவென குறைந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. 

தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 590 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 51 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 37 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.