கோயில் காளைக்கு தினமும் பரோட்டா... 

மதுரை விமான நிலைய சாலையில் உள்ள ஹோட்டலுக்கு அதிகாலையில் பரோட்டா உண்ண செல்லும் கோயில் காளை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோயில் காளைக்கு தினமும் பரோட்டா... 
பெருங்குடியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் முருகேசனுக்கு சொந்தமான ஹோட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது ஹோட்டலுக்கு முன்பு பெருங்குடி முத்தையா கோயில் காளை நின்று கொண்டிருந்தது.
 
இதனை கண்ட உரிமையாளர், காளை மாட்டிற்கு புரோட்டா மற்றும் சப்பாத்தி கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்ற கோயில் காளை, இந்த ஹோட்டலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர் முருகேசன், நாள்தோறும் மீதம் உள்ள புரோட்டாக்களை காளைக்கு கொடுத்து வருகிறார். இவரது மனிதநேய செயல், பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.