டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக-  ஹெச்.ராஜா ஆவேசம்  

உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக-  ஹெச்.ராஜா ஆவேசம்   

உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பிற்படுத்தப்பட்ட  சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல் படுத்திக் கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சிதான் என்றார். மேகதாது விவகாரத்தில், மத்திய சர்க்கார் அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என தெரிவித்துள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை, ஆனால் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். வருமுன் காப்பதற்காகவும், இது ஒரு தடுப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி எனவும் கூறிய ராஜா, உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தடை விதித்தால் விவசாயிகளின் துரோகி திமுக என்று நிரூபணம் ஆகி விடும் என அவர் தெரிவித்தார்.