மத்திய அரசுக்கு எதிராக வரும் 20-ம் தேதி திமுக கண்டன போராட்டம்...

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி, திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக வரும் 20-ம் தேதி திமுக கண்டன போராட்டம்...

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி, திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று, கடந்த மாதம் சோனியா காந்தி தலைமையில் நடந்த, தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி பாஜக அரசின் செயல்களைக் கண்டித்து, திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சியினரும், வரும் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில், தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுமாறு துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து 20ஆம் தேதி தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.