அநீதியை கையில் எடுத்து அராஜகத்தின் மொத்த உருவமாக திகழ்கிறது திமுக - வைகைசெல்வன் விமர்சனம்!

அநீதியை கையில் எடுத்து அராஜகத்தின் மொத்த உருவமாக திகழ்கிறது திமுக - வைகைசெல்வன் விமர்சனம்!

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் களம் நேர்மையாக இல்லை என்றும், அநீதியை கையில் எடுத்துக் கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.

சேலத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் களம் நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!

தொடர்ந்து பேசிய அவர், திமுக வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயகப் படுகொலையை செய்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த பணக்காரர்கள் மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக வர முடியும் என்ற நிலையை திமுக ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். அத்துடன், அநீதியை கையில் எடுத்துக் கொண்டு அராஜகத்தின் மொத்த உருவமாக திமுக உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.