"இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது" முதலமைச்சர் காட்டம்!

"இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது" முதலமைச்சர் காட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையொட்டி இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிபடுத்த ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.Minister Senthil Balaji Arrested Live News | அமைச்சர் கைதுக்கு காரணமான உச்ச  நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் முகஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனையொட்டி  முதலமைச்சர்  தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அப்பதிவில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?  என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது எனவும் இச்சம்பத்திற்கு 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அமைச்சர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றவர்கள் கைது!