அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை அறிவாலயத்தில் நாளை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளன. இதனிடையே விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும்  கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.