தைரியம் இருந்த ஆட்சியை கலைத்து பாரு: மாரிதாஸுக்கு சவால் விட்ட எம்.பி யார்?

தைரியம் இருந்த திமுக ஆட்சியை கலைத்து பாரு என பாஜக ஆதரவாளரான மாரிதாஸுக்கு திமுக எம்பி செந்திகுமார் சவால் விட்டுள்ளார்.

தைரியம் இருந்த ஆட்சியை கலைத்து பாரு:  மாரிதாஸுக்கு சவால் விட்ட எம்.பி யார்?

தைரியம் இருந்த திமுக ஆட்சியை கலைத்து பாரு என பாஜக ஆதரவாளரான மாரிதாஸுக்கு திமுக எம்பி செந்திகுமார் சவால் விட்டுள்ளார்.

பிரபல தலைவர்களான அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி தொடங்கிப் பல தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர் தற்போது செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கிஷோர்.கே. சாமியின் கைது நடவடிக்கைக்கு யூ டியூபர் மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதில், "திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியைக் கலைப்பது தான் சரி" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார், "தைரியம் இருந்தா கை வைச்சு பாரு. நீங்க எல்லாம் யாரு. நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பின் குறிப்பு: உள்ளே போகும் போது மறக்காம board எடுத்துட்டு போகவும்" என்று சவால் விடுத்து ட்வீட் செய்துள்ளார். இவை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.