ஆபாச வீடியோவை தடுத்து நிறுத்துங்கள்... சமூக வலைதளங்களுக்கு சைபர் கிரைம் கடிதம்...

ஆபாச வீடியோவை பரவ விடாமல் தடை செய்யக்கோரி சமூக வலைதள நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் கடிதம்.

ஆபாச வீடியோவை தடுத்து நிறுத்துங்கள்... சமூக வலைதளங்களுக்கு சைபர் கிரைம் கடிதம்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி வழக்கு விசாரணையின் போது ஆபாசமாக நடந்து கொண்ட வழக்கறிஞரின் வீடியோவை பரவ விடாமல் தடை செய்யக்கோரி, அனைத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கும் சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்கறிஞரிடம் மற்றொரு வழக்கறிஞர் ஆபாசமாக நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

நீதிமன்ற மாண்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி. ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச வீடியோ பரவாமல் இருப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதையடுத்து குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவ விடாமல் தடை செய்யக்கோரி அனைத்து சமூக வலைதள நிறுவனங்களுக்கும் சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.