ஆன்லைன் விளையாட்டு மோசடி... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை...

ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பது போல், மோசடி செய்யும் கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. 

ஆன்லைன் விளையாட்டு மோசடி... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை...
ஆன்லைன் விளையாட்டு போட்டியில் விளையாட நினைக்கும் நபர்கள், போலி லிங்க் வழியாக நுழையும்போது அவர்களது செல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மோசடி கும்பல்  திருடி விடுவதாக குறிப்பிட்டுள்ள காவல்துறை, அங்கீகரிக்கப்பட்ட வெப்சைட் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுமாறும், பாதுகாப்பில்லாத வெப்சைட்டுகள் வழியாக எந்தவித ஆன்லைன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கூகுள் அக்கவுண்ட்கள், தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.