துபாய்க்கு கடத்த இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்-க்கு கடத்த இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய்க்கு கடத்த இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்-க்கு அதிகளவில் வைரம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில், சூட்கேசின் கைப்பிடியில் மறைத்து வைத்து 5 கோடியே 76 லட்சம்  மதிப்பிலான 
 வைரகற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரகற்களை பறிமுதல் செய்தனர்.