நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? திருச்சி போக்குவரத்து துறையை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்...!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? திருச்சி போக்குவரத்து துறையை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்...!

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன் என திருச்சி போக்குவரத்து துறை அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தனியார் பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க : ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - ஓபிஎஸ்!

ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உத்தரவை நிறைவேற்றாத திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.