திடீரென அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று உறுதி...

தமிழகத்தில் மேலும் கொரோனா தொற்றால்  ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திடீரென அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று உறுதி...

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 694 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 57 ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து நேற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 658 ஆக உள்ளது. அதே சமயம் தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.