தமிழகத்தை விட்டு கிளம்பும் கொரோனா வைரஸ்.. Bye சொல்லும் மக்கள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை விட்டு கிளம்பும் கொரோனா வைரஸ்.. Bye சொல்லும் மக்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் 158 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் நேற்று 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதே சமயம், நேற்று ஒரே நாளில் 512 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளது.