சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால் கொரோனா நோயாளி பலி - வீடியோ வைரல்...

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால் கொரோனா நோயாளி பலி -  வீடியோ வைரல்...

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்  சிதம்பரத்தை சேர்ந்த கோதண்டராமன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை செல்வி ஆகிய இருவரும் கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம்  ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். கடந்த 1-ம் தேதி கோதண்டராமன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில், மருத்துவமனையின் சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களை அழைத்தபோது, உடனடியாக உதவிக்கு வரவில்லை என்றும் இதனால் அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக முதலமைச்சர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.