தமிழகத்தில் புதிதாக 962 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 962  பேருக்கு கொரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்புக்கு  ஒரே நாளில் 19 பேர்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 12 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.