தமிழகத்தில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 973 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் கொரோனா கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று  973  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 586  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று  வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,114 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 57 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.