மாணவிகள் 4 பேருக்கு கொரோனா- 5 நாட்கள் பள்ளி மூடல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி மாணவிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 5 நாட்கள் அரசு பள்ளி மூடப்பட்டது.

மாணவிகள் 4 பேருக்கு கொரோனா- 5 நாட்கள் பள்ளி மூடல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மொத்தாம் 131 மாணவ, மாணவியர்கள்  படித்து வருகிறார்கள் .இதற்கிடயில் கடந்த 30-ந்தேதி திருச்சியிலிருந்து வரும் ஆசிரியர் ஒருவர்க்கு கொரோனாதொற்று உறுதி செய்யபட்டுள்ளதை தொடர்ந்து  மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியர்கள் , ஆசிரியர்கள் உட்டபட 96 பேருக்கு  கொரோன பரிசோதனை செய்தனர்.

அதில் 9ம் வகுப்பு படிக்கும்  மூன்று மாணவிகளுக்கும்  10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர்க்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில்  5  நாட்களுக்கு பள்ளிகூடத்திற்கு விடுமுறை அளிக்கபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது .கொரோணா தொற்று பாதிக்கப்பட்ட நான்கு பேரும்   மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்   .