தமிழகத்தில் இன்று புதிதாக 756 பேருக்கு கொரோனா உறுதி...

தமிழகத்தில் இன்று புதிதாக 756 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 756 பேருக்கு கொரோனா உறுதி...

தமிழகத்தில் கொரோனா  தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 756 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

kகொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  கொரோனா பாதிப்பில் இருந்து 847 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 75 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.  இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.