தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்... 

தமிழகத்தில் தற்போது 9 ஆயிரத்து 78 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவல்... 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக மேலும் 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 896 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா தாக்குதலுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக இருந்த நிலையில் நேற்று 126 ஆக உயர்ந்துள்ளது.