தமிழகத்தில் மேலும் 820 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 820 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 820  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,12,404 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு 10,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 962 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 26,66,140 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம், வைரஸ் தாக்குதலுக்கு  ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,251 ஆக அதிகரித்துள்ளது.  மாவட்ட அளவில் சென்னையில் 125 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.