விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க கட்டுப்பாட்டு அறை... அமைச்சர் மெய்யநாதன் தகவல்...

விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க கட்டுப்பாட்டு அறை... அமைச்சர் மெய்யநாதன் தகவல்...

தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி  நிகழ்வை துவக்கி வைத்தார்.

நாளை வரை 3 நாட்கள் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைய, மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் வீரர்கள், அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட உள்ளனர்.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறையின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்துவதற்கும், அவர் தொடர்ந்து இளமையாக இருப்பதற்கும் விளையாட்டின் மீது அவருக்குள்ள ஆர்வமே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அமைச்சர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக அமைச்சரை கவுரவிக்கும் விதமாக வீரர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.