பட்டாசு ஆலையில் தொடரும் வெடி விபத்து: கேள்விக்குறியான மனிதர்களின் உயிர்...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இருவர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலையில் தொடரும் வெடி விபத்து: கேள்விக்குறியான மனிதர்களின் உயிர்...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இருவர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே தாயல்பட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிப்பொருள்கள் வெடித்து சிதறி விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து தடைமட்டமாகியுள்ளது. விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தீயணைப்பு திறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.