கள்ளக்குறிச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க பரிசீலிக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்!

கள்ளக்குறிச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க பரிசீலிக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தொடங்குவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க : சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி பதில்!

இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் 39 மாவட்டங்களுக்கு 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே உள்ளதாகவும், எதிர்காலத்தில் கள்ளக்குறிச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க பரிசீலிக்கப்படும் எனவும் பதிலளித்தார்.