கன்னியாகுமரியில் காங்கிரஸ் பிரமுகர் கைது...! ஏற்கனவே  பல குற்றசாட்டுகள்..!

கன்னியாகுமரியில்  காங்கிரஸ் பிரமுகர் கைது...!  ஏற்கனவே   பல குற்றசாட்டுகள்..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பெண்களிடம் தவறாக நடக்கமுன்ற காங்கிரஸ் பிரமுகரை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நந்தங்காடு பகுதியை சேர்ந்தவர்  ராஜன் சேவியர் (52) காங்கிரஸ் கட்சியில் நந்தங்காடு கிளை செயலாளராக   இருந்துவரும் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார் இதனால் தனிமையில் இருத்துவரும்  ராஜன்சேவியர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பகுதி பெண்களிடம் தகாத வார்தைகளைக்  கூறி வந்துள்ளார்.

A functional drunkard is a drunk whether he wears rags or Gucci - The  Standard

இந்நிலையில் இன்று மாலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன் சேவியர்  தனது வீட்டிற்கு அருகில் உள்ள  பெண்களிடம் தனது உடைகளை அவிழ்த்து தவறாக  நடக்கமுயன்றாக தெரிகிறது. இதையடுத்து ராஜன்சேவியரை  பெண்கள் மற்றும் அப்பகுதியினர் முற்றுகையிட்டனர். இந்த  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற ராஜன் சேவியரை கைது செய்தனர்.

இதையும் படிக்க     }  மணல் குழிகளை உடனடியாக மூடிடுக...!. -அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர் மீது ஏற்கனவே பெண்களிடம்  தவறாக நடக்கமுயன்றதாகவும்,  ஆபாச மெசேஜ்கள்  அனுப்பியதாகவும்  பல குற்றசாட்டுகள் இருந்தது தெரியவந்தது. பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற காங்கிரஸ் பிரமுகரை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க     }  முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு கொண்ட ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம் - எஸ்டிபிஐ கட்சி