பா.ஜ.க.வினருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மோதல்: நிர்மலா சீதாராமன் அதிருப்தி

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பா.ஜ.க.வினருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பா.ஜ.க.வினருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே மோதல்: நிர்மலா சீதாராமன் அதிருப்தி

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பா.ஜ.க.வினருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வ.உ.சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே, விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பா.ஜ.க.வினரை உள்ளே அனுமதிக்க மறுத்து, வங்கி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர், வங்கி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு  நிலவியது.