ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்த 5 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்..!

தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள்..!

ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்த 5 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்த 5 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் 4 கோடியே 34 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பணமோசடி தொடர்பாக ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்து வரும் அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த 5 பேர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசியல் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி பரம்வீர், ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனையொட்டி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.