9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு...

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு...

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 

இந்நிலையில் இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், 6 நாட்களாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த 6 நாட்களில் 64 ஆயிரத்து 299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும், வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.