தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யுங்கள்... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...

காங். தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிவரும் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யுங்கள்... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பி வரும் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆர். டி.ஐ பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆர். டி.ஐ பிரிவுத் தலைவர் கனகராஜ் புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறுக் கருத்துகளைப் பரப்பிவரும் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.