கோவை: "தர்ணா போராட்டம்".. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் கைது!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை: "தர்ணா போராட்டம்".. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் கைது!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உள்ள வெளி மாவட்ட திமுகவினரை வெளியேற்றுமாறு அவர்கள் முழக்கமிட்டனர். திமுகவின் முறைகேடுகளுக்கு காவல்துறை உதவி செய்வதாகவும், துணை நிலை ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் சமீரன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து  தர்ணாவை தொடர்ந்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்து  சென்றதால்  பெரும் பரபரப்பு  நிலவியது.