கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றிய விஜயகுமார் கோவை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 7 ஆம் தேதி கோவையில் அவர் பதவியேற்றார். இந்நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு  கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் கடந்த 2 தினங்களாகவே விஜயகுமார் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. போலீஸ் டிஐஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:ரூ.1,000 உரிமைத் தொகை - முதலமைச்சர் ஆலோசனை ..!