அரசு கலை கல்லூரி மாணவிகளிடையே குடுமிச்சண்டை - எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிய காவல்துறை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகளிடையே ஏற்பட்ட குடுமிச்சண்டையால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அரசு கலை கல்லூரி மாணவிகளிடையே குடுமிச்சண்டை - எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிய காவல்துறை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் இரு தரப்பு மாணவிகளுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் குடுமிச்சண்டையில் ஈடு்பட்டதால், சக மாணவ, மாணவிகள் விலக்கி விட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர்,  மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.