இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல்.. என்ஜின்களை கழற்றி வீசியதால் பரபரப்பு!

இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல்.. என்ஜின்களை கழற்றி வீசியதால் பரபரப்பு!

நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை மர்ம நபர்கள்  கழற்றி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேல பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் , கீழ பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவா்களுக்கும் இடையே மீன்களை விற்பனை செய்வதில், பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல பட்டினச்சேரி பகுதி மீனவர்களின் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை மர்ம நபர்கள் ஆற்றில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் துறைமுகத்தில் திரண்ட ஏராளமான மேல பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழும் சம்பவம் பெருத்த வேதனையை உண்டாக்கியிருக்கிறது.