"தேர்வை தாய்மொழியில் எழுத அனுமதி வழங்கிடுக"..! அமித்ஷா -விற்கு முதலமைச்சர் கடிதம்...!

"தேர்வை தாய்மொழியில் எழுத அனுமதி வழங்கிடுக"..! அமித்ஷா -விற்கு முதலமைச்சர் கடிதம்...!

சி.ஆர்.பி.எஃப் ஆட்சேர்க்கைக்கான தகுதித்தேர்வினை  அவரவர் தாய்மொழியில் எழுத அனுமதி வழங்க  வேண்டும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காலியிடங்களில் 579 இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்பட வேண்டும் என்றும், அதற்கான தேர்வு 12 மையங்களில் நடத்தப்பட உள்ளது என்றும் மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவ்வாறிருக்க, சி.ஆர்.பி. எஃப்  ஆட்சேர்ப்புக்கான கணினி தேர்வில் தமிழ் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்ற அறிவிப்பு பாரபட்சமானது எனவும், இந்த செயல் ஒருதலைப்பட்சமானது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பால், தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் தங்கள் தாய்மொழியில் தேர்வை முயற்சிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று முதல்வர் ஷாவிடம் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், 100க்கு 25 மதிப்பெண்கள் "இந்தி மொழியில் அடிப்படை புரிதலுக்காக" ஒதுக்கப்பட்டுள்ளன. இது இந்தி பேசும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.ஹிந்தி தெரியாத தேர்வர்களுக்கு இதில் சிரமம் ஏற்படும். “எளிமையாகச் சொல்வதானால், இந்த சி.ஆர்.பி. எஃப் அறிவிப்பு தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்களின் நலன்களுக்கு எதிரானது. 
இது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல, பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது,”. இது, இந்தி தெரியாத  தேர்வர்கள் அரசுப் பணியில் சேருவதைத் தடுக்கும் என்றும் முதல்வர் ஷாவிடம் கூறியதாக 
அந்த கடிதம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமித்ஷாவின் உடனடி தலையீட்டை எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார். 

இதையும் படிக்க:.. குறுநில மன்னர்களின் ஆட்சி...! அன்புமணி ராமதாஸ் சூசகம்...!
https://www.malaimurasu.com/posts/tamilnadu/Anbumani-demands-seperation-of-Thiruvannamalai-District